blog title

வியாழன், 18 அக்டோபர், 2012

அருகம்புல் காபி - சித்த மருத்துவ முறை

அருகம்புல் காபி 





அருகம்புல் காபி 

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் 
காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் 
சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி 
விட்டோம்.இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி -டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என 
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் 
உள்ளவர்களுக்கும்,உடலை ஆரோக்கியமாக வைத்துக் 
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் 
ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை :

தேவையான மூலிகை  பொருட்கள் :

1 - ஏலரிசி            - 25-கிராம்  
2 - வால்மிளகு    - 50 கிராம் 
3 - சீரகம்              - 100-கிராம் 
4 - மிளகு              - 200 -கிராம் 

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே 
இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து 
கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி 
ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர்,தழை இல்லாமல் தண்டுப் 
பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக 
அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு  500- மிலி நீர் விட்டு அடுப்பில்
வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2-டீஸ்பூன் 
போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி  அளவில் 
வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய 
பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு 
வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக 
இருக்கும்.இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் 
பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் 
சுத்தமாகும்.நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட 
விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது.நரம்புத்தளர்ச்சி 
நீங்கும்,அதிக பித்தம்,பித்த மயக்கம்,நெஞ்செரிச்சல் நீங்கும்.
குடல் சுத்தமாகும்,மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகு 
கின்றது.

உடலின் உட்சூடு மறையும்,பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் 
சீராகும்,வெள்ளைப்படுதல்,அடி வயிறு கனத்தல்,தொடை நரம்பு 
இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள்,கணை,
மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது.பசி நன்கு எடுக்கும் 
சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

(இம்முறை ஏராளமானோர் செய்து பயனடைந்து வரும் முறை )

நன்றி !

Dr .அரவிந் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - facebook         


          




வியாழன், 11 அக்டோபர், 2012

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 






ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே
மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடை
கின்றனர் என்பது உண்மை.ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில்
வளம் பெறலாம்.

   செய்முறை :
 1 -  வல்லாரை இலை    - 70 -கிராம் 
 2 -  துளசி இலை            - 70 -கிராம் 
 3 -  சுக்கு                         - 35 -கிராம் 
 4 -  வசம்பு                      - 35 -கிராம்  
 5 -  கரி மஞ்சள்               -35 -கிராம் 
 6 -  அதிமதுரம்                -35 -கிராம் 
 7 -  கோஷ்டம்                 - 35 -கிராம் 
 8 -  ஓமம்                         - 35 -கிராம் 
 9 -  திப்பிலி                     - 35 -கிராம் 
10 - மர மஞ்சள்                - 35 -கிராம் 
11 - சீரகம்                        -  35 -கிராம் 
12 - இந்துப்பு                   -  35 -கிராம் 

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 
இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் 
இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும்.இதே போல் 
தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி,மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும்.
மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் 
காப்பாற்றும்.

நன்றி...!

Dr.அரவின் தீபன்...

aravindeepan@gmail.com
siddha maruththuvam kelvi pathil kulu-facebook
Siththamaruththuvavilakkam.blogspot.in
   











வியாழன், 4 அக்டோபர், 2012

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து





சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

கேள்வி.?
இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்
ஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 
மருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா ...?

நிச்சயம் உண்டு !
சித்தர்கள் நோய்க்கான மருந்துகளை மட்டும்
கூறவில்லை இவைகள் வராமல் தடுக்கும்
முறைகளை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
தை மாதம் முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள்
மட்டும் இம் மருந்தை உட்கொண்டால் ஒரு வருடம்
உங்கள் உடலில் சர்க்கரை நோய் தாக்காது .

"சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து"

1- கடுக்காய் தோல் பொடி-1 -கிராம்
2- நெல்லிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
3- தான்றிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
4- தலைச்சுருளி இலைப்பொடி- 2 -கிராம்
மேற்கண்ட ஐந்து கிராம் பொடியை மாலையில்
தண்ணீர் ஒரு தம்ளர் அளவில் கலந்து குடிக்கவும் .

தொடர்ந்து நாற்பது நாட்கள் அருந்தி வர உடலில்
நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,திரி நாடி நிலைகள்
சமன் படும்,இரத்தத்தில் உள்ள நஞ்சுகள் அகன்று
உடலில் புத்துணர்ச்சி கிட்டும்,உடலில் புது இரத்தம்
பெருகும்,மேலும் ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோய்
உடலில் வராமல் தடுக்கும்.

இது ஒரு கைகண்ட அனுபவ மருந்தாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...